சென்னை

ன்று அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளுக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் ‘மிக்ஜம்’ புயல் காரணமாக அதி கன மழை பெய்தது. இவ்வாறு 36 மணி நேரம் இடைவிடாது பெய்த கன மழையால் சென்னை மாநகரமே தத்தளித்தது.  இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி கடல்போல் காட்சி அளிக்கிறது.

கன மழை ஓய்ந்த பிறகும் வெள்ளம் வடியாததால் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மிகுந்த அவதி அடைந்துள்ளனர். மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் மற்றும் நிவாரண பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

சென்னையில் பெய்து வந்த தொடர் கனமழை காரணமாக அண்ணா பல்கலை. மற்றும் அதன் உறுப்பு பொறியியல் கல்லூரிகளில் சில செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டிருந்தன. பல்கலைக்கழகம்  இதற்கான மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருந்தது.

தற்போது ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகளுக்கான புதிய அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.  தேர்வுகள் வரும் 11 ஆம் தேதி தொடங்கி 2024 பிப்ரவரி 17 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.