சென்னை

மிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிய நிர்வாகிகளை அக்கட்சித் தலைவர் செல்வப்பெருன்ந்தகை நியமித்துள்ளார்.

விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

கடந்த 17 ஆம் தேதி அன்று அகில இந்தியக் காங்கிரஸ் தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக செல்வப்பெருந்தகையும் சட்டப்பேரவை காங்கிரஸ் குழு தலைவராக எஸ்.ராஜேஷ் குமாரையும் அறிவித்தது.

இன்று, தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து அக்கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதன்படி தமிழக மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர்களாக ஏ.கோபண்ணா, சொர்ணா சேதுராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பொதுச்செயலாளர்களாக டி.செல்வம், கே.தணிகாசலம் மற்றும் என்.அருள் பெத்தையா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.