திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் தனசிங் (வயது 60). தொழிலதிபரான இவர் காங்கிரஸ் கட்சியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவராகவும் இருந்து வந்தார்.

கடந்த 2 ஆம் தேதி (02.05.2024) வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்றவர் இரண்டு நாட்களுக்குப் பின் உடல் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்த நிலையில் ஜெயக்குமார் தனசிங் எழுதிய இரண்டு கடிதங்கள் சிக்கியதை அடுத்து காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இது தொடர்பாக ஜெயக்குமார் கடிதத்தில் குறிப்பிட்ட நபர்கள் மற்றும் சந்தேக நபர்கள் என 30 பேருக்கு மாவட்ட காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

அதில், ரூபி மனோகரன், முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு உள்ளிட்ட முக்கிய காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.