டெல்லி: இளநிலை நீட் தேர்வுக்கான விண்ணப்பம் இன்றுமுதல் (மார்ச் 6ந்தேதி) தொடங்குவதாக தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

மருத்துவப் படிப்பு மற்றும் மருத்துவத்துறை சார்ந்த துணை படிப்புகளுக்கு, நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவது கட்டாயம். இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கு தனித் தனியே நீட் தேர்வு நடைபெறுகிறது. முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு மார்ச் 5ந்தேதி  நாடு முழுவது நடைபெற்றது.

இதையடுத்து, இன்று இளநிலை நீட் தேர்வுக்கான விண்ணப்பம்  பதிவு இணையதளத்தில் (https://neet.nta.nic.in/) தொடங்கி உள்ளது.

இந்த நிலையில்,  2023-ம் ஆண்டுக்கான இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கான நீட் தேர்வுக்கு இன்று  (மார்ச் 6) முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

தேர்வர்கள் தேசிய தேர்வு முகமையின் (https://neet.nta.nic.in/) இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இளங்கலை படிப்புக்கான நீட் தேர்வு வரும் மே மாதம் 7 ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.