திருச்செந்தூர்: மாசித்திருவிழாவையொட்டி, திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று திருத்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பல லட்சக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து தேரை இழுத்து வருகின்றனர்.

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் 12 நாட்கள் மாசி திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

மாசித்திருவிழாவையொட்டி தினந்தோறும் ம் காலை, மாலை நேரங்களில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்று வருகிறது.

 8-ம் திருவிழாவான சனிக்கிழமை பகல் 1.45 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் வள்ளி, தெய்வானையுடன் பச்சை சாத்தி சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து மேல கோவிலில் சேர்தல் நடைபெற்றது.  9-ம் திருவிழாவானநேற்று இரவு 10 மணிக்கு தேர் கடாட்சம் நடைபெற்றது.

10-ம் நாள் திருவிழாவான இன்று (திங்கட்கிழமை) விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்று வருகிறது.

 இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பபட்டு அதிகாலை பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து, காலை  காலை 7 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் மீன லக்னத்தில் தேரோட்டம் ‘தொடங்கி நடைபெற்று வருகிறது. பல லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வடம்பிடித்து தேரை இழுத்து வருகின்றனர்.

மாசி திருவிழா தேரோட்டத்தை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள்  திருச்செந்தூரில் கடந்த சில நாட்களாக குவிந்து வருகின்றனர். தென்மாவட்டங்களில் இருந்து பல ஆயிரம் பக்தர்கள்,  பாதயாத்திரையாக செந்தூர் வந்துள்ளனர்.

 இதையடுதுது நாளை  11-ம் திருவிழாவன்று  அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து மற்ற கால பூஜை நடக்கிறது அன்று மாலை 4.30 மணிக்கு சுவாமி, அம்பாள் யாதவர் மண்டகப்படி வந்து அங்கு அபிசேகம், அலங்கார தீபாராதனைக்கு பின் இரவு 7 மணிக்கு மேல் திருநெல்வேலி நகரத்தார் மண்டகப்படி சேர்த்தல் நடக்கிறது. அங்கு 10.30 மணிக்கு மேல் சுவாமி குமரவிடங்க பெருமான் தெப்பத்தில் 11 சுற்றுகள் சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

விழாவில் ஒவ்வொரு நாளும் கோவில் வளாகத்தில் உள்ள கலையரங்கில் சமய சொற்பொழிவு, திருவாசகம் முற்றோதுதல், பரத நாட்டியம், பட்டிமன்றம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. விழாவுக்கான ஏற்பாடு களை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், கோவில் இணை ஆணையர் கார்த்திக் மற்றும் பணியாளர்கள் செய்துள்ளனர்.