சேலம்:  கென்யா நாட்டில் இருந்து தமிழ்நாடு  திரும்பிய நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த  இளைஞருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

சீனாவில் கொரோனா மீண்டும் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்தியா உள்பட பல நாடுகள் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளன. அதன் ஒரு பகுதியாக, இந்தியாவில் வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  கென்யாவில் பணியாற்றி வந்த, நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் வட்டம் காளப்பநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த 36 வயது இளைஞர்  பொங்கல் பண்டிகையையொட்டி இரு நாள்களுக்கு முன்பு அவர் நாடு திரும்பினார். கென்யாவிலிருந்து ஷார்ஜா வழியாக கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கே அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டடு,  சளி மாதிரிகள் சென்னையில் உள்ள கரோனா ஆய்வு மையத்துக்கு அனுப்பப்பட்டது.

இந்த ஆய்வு முடிவில், நாமக்கல் நபருக்க கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, நாமக்கல் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ஜெ. பிரபாகரன் உத்தரவின் பேரில்,  அவரது வீட்டுக்கு வந்த சுகாதாரத்துறை ஊழியர்கள், அவரை  வீட்டில் தனிமையில் இருக்க அறிவுறுத்தினர்.  மேலும், அவருடைய குடும்பத்தில் உள்ள 6 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மேலும்  காளப்பநாயக்கன்பட்டி பகுதியில் கொ ரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.   கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் நலமுடன் உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.