சென்னை:

கள் திருமண ஏற்பாடுகளை கவனிக்க தனதுக்கு  6மாதம் பரோல் வேண்டும் என்று ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளியான நளினி சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இது மீது தமிழகஅரசு  பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள நளினி கடந்த 27 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.  தன்னை விடுவிக்க வேண்டும் என்று பலமுறை அரசுக்கும்,  சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருதும், அவரது விடுதலை மறுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  தனது மகள் ஹரிதாவின் திருமண ஏற்பாடுகளை கவனிக்க 6 மாதங்கள் பரோல் வழங்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில்  வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், தானே ஆஜராக இருப்பதாகவும், அதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை  நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல் குமார் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது, நளினின் கோரிக்கையான  நேரில் ஆஜராகி வாதிட அனுமதிக்கோரிய மனுவுக்கு ஜூன்11ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

அத்துடன், நளினிக்கு அவசரமாக பரோல் தேவைப்பட்டால் விடுமுறைகால நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தினர்.