சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகளில் ஒருவரான  சிறையில் உள்ள முருகனுக்கு 6 நாட்கள் பரோல் கோரி, அவரது மனைவி நளினி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் கடந்த 30ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பேரறிவாளன் மட்டும் உச்ச நீதிமன்ற தீர்ப்பால் விடுவிக்கப்பட்டு உள்ளார்.  மற்றொரு குற்றவாளியான ரவிச்சந்திரன் கடந்த சில மாதமாக பரோலில் இருந்து வருகிறார். அதுபோல, இன்னொரு குற்றவாளியான நளினியும், கடந்த 6 மாதமாக பரோலில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில், அவர் தனது கணவர் முருகனுக்கு 6 நாட்கள் பரோல் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.  முருகன் சார்பில் அவரது மனைவி நளினி தாக்கல் செய்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.