நீண்ட இடைவெளிக்குப் பின் வைகைப்புயல் வடிவேலு முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் நகைச்சுவை திரைப்படம் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’.

கடந்த மாதம் பூஜை போடப்பட்ட நிலையில் நடிகர் வடிவேலுவுக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்தப் படத்தின் இசையமைப்பு பணிகள் லண்டனில் நடைபெற்று வருகிறது.

இதற்காக இயக்குனர் சுராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், தயாரிப்பாளர் சுபாஷ்கரன், லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் பிரேம் மற்றும் தமிழ்குமரன் ஆகியோர் லண்டனில் முகாமிட்டுள்ளனர்.

வடிவேலுவுடன் சேர்ந்து லண்டனில் இவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர்.