புதுக்கோட்டை: அதிகாலை நடைப்பயிற்சியின்போது டீக்கடையில் உள்ள முதியவர் மற்றும் நபர்களிடம்  அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளவளாவினார். அப்போது, கொரோனா வீடியோ குறித்து விவாதித்தார். அது தொடர்பான  வீடியோ வைரலாகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கொரோனா நிலவரம் குறித்து ஆய்வு செய்ய சென்றுள்ள தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் இன்று அதிகாலை நடையிற்சி சென்றார். த.செங்கமேடு எனும் கிராமத்தில் டீ குடித்தபடியே  அங்கு வரும் பொதுமக்களிடம் கொரோனா நிலவரம், தடுப்பூசி குறித்து பேசினார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட் பதிவில்,  சற்று முன் அதிகாலை நடைப்பயிற்சிக்கிடையில் த.செங்கமேடு எனும் கிராமத்தில் டீ குடித்தபடியே “தடுப்பூசி” நிலவரம் பற்றி கேட்டறிந்தோம்.நல்ல விழிப்புணர்வு பெற்றுள்ளது த.செங்கமேடு… என்று தெரிவித்து உள்ளார்.