டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 44,111-பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், தொற்று பாதிப்பு குணமடைந்து 57,477 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி,  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 44,111- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து 57,477- பேர் ஒரே நாளில் குணம் அடைந்துள்ள நிலையில், தொற்று பாதிப்புக்கு மேலும் 738- பேர் உயிரிழந்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 3,05,02,362- ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2,96,05,79 ஆக அதிகரித்து உள்ளது.

தொற்று பாதிப்பால் சிகிச்சை பலனின்றி யிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,01,050- ஆக உயர்ந்துள்ளது.

தற்போது சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 95 ஆயிரத்து 533 ஆக குறைந்துள்ளது.

நாட்டில் இதுவரை போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 34 கோடியே 46 லட்சத்து 11 ஆயிரத்து 291- ஆக உயர்ந்துள்ளது.