சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை டி.டி.கே. சாலை மியூசிக் அகாடமியில் உச்சநீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் முன்னிலையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பதாக இருந்தது. அந்த நிகழ்ச்சிக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்லவில்லை

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு லேசான காய்ச்சல் இருந்ததாகவும் அதனால் வீட்டில் ஓய்வெடுப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.