சென்னை,

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 101வது பிறந்தநாளையொட்டி அவரது உருவ சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்தநாளையொட்டி, தமிழக அரசின் சார்பில் விழா கொண்டாடப்படுகிறது.  அவருக்கு மரியாதை  செலுத்தும் வகையில், கிண்டி எம்ஜிஆர் பல்கலைக்கழக வளத்தில் உள் ள  அவரது சிலைக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்திலும் எம்ஜிஆர் பிறந்ததின நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.