மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவையொட்டி, அழகர் மலையில் இருந்து மதுரை நகருக்குள் தங்கப்பல்லக்கில் வந்த கள்ளழகர், தனது பணிகளை முடித்துவிட்டு இன்று அதிகாலை அழகர் மலைக்கு திரும்பினார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு கள்ளழகரை வழியனுப்பி வைத்தனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மதுரை சித்திரை திருவிழா இந்த ஆண்டு கோலாகலமாக நடைபெற்று வந்தது. கூட்ட நெரிசலில் சிக்கி இருவர்கள் மரணம் அடைந்ததைத் தவிர எந்த அசம்பாவிதமும் இன்றி, சிறப்பாக நடைபெற்று முடிந்தது. கடந்த 14ஆம் தேதி மலையில் இருந்து மதுரைக்கு வந்த கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு அழைத்த எதிர்சேவை கோலாகலமாக நடைபெற்றது. அதைத்தொடர்ந்து வைகை ஆற்றில் தங்கக் குதிரை வாகனத்தில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.

 வண்டியூர் சென்ற அழகர் தீர்த்தவாரிக்கு பின்னர் ஆற்றங்கரை வழியே வண்டியூர் சென்று வீரராகவப் பெருமாள் கோவிலில் தங்கினார். அங்கு கள்ளழகரின் வெப்பத்தை தணிக்கும் வகையில் பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து அழகரின் வெப்பத்தை தணிக்கும் வகையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தண்ணீரை பீய்ச்சி அடித்து தீர்த்தவாரி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

அதைத்தொடர்ந்து,  மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்  உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. .பின்னர் ராமராயர் மண்டபத்தில், தசாவதார கோலத்தில் பக்தர்களுக்கு விடிய விடிய காட்சி அளித்தார். பின்னர் மோகினி அவதாரத்திலேயே மண்டகப்படிகளில் தங்கியபடி இரவு 11 மணியளவில் தல்லாகுளத்தில் உள்ள ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபம் வந்தார். அங்கு கள்ளழகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பூப்பல்லக்கில் திரும்பிய அழகர் பின்னர் ஏகாந்த சேவையில் காட்சியளித்தார். தொடர்ந்து அங்கு கள்ளழகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. திருமஞ்சனமான அழகர் அதிகாலையில் பூப்பல்லக்கில் எழுந்தருளினார். கருப்பணசாமி கோயில் சன்னதி அருகே காட்சியளித்தார். கருப்பணசாமி கோவிலில் பிரியாவிடை பெற்று வையாழியான உடன் அழகர் மலைக்கு புறப்பட்ட கள்ளழகரை பக்தர்கள் சேவை செய்து பிரியாவிடை கொடுத்து வழியனுப்பினர்.

பக்தர்கள் பிரியாவிடை புதூர், மூன்றுமாவடி வழியாக சுந்தராஜன்பட்டி சென்றடைந்து அங்குள்ள மறவர் மண்டகப்படிக்கு நேற்று இரவு சென்றடைநத்ர். அழகர் மதுரை வரும்போது எப்படி எதிர்கொண்டு அழைக்கின்றனரோ அதேபோல அவர் மலைக்கு திரும்பும் போதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து வழியனுப்புவது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. இன்று, கால அவர் அழகர் மலை சென்றடைந்தார். அதையடுத்து  அழகருக்கு உற்சவ சாந்தி நிகழ்ச்சி நடைபெறுகிறது. அத்துடன் அழகர் கோவில் சித்திரை திருவிழா நிறைவடைகிறது.

இனிமேல் அடுத்த வரும் சித்திரை விழாவின்போதுதான் கள்ளழகர் மதுரை வருவார்.