தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வந்தது. மருத்துவ ஆக்சிஜன், வென்டிலேட்டர்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆகியவற்றின் தேவை அதிகரித்து வருகிறது.

இதனிடையே, கொரோனா தொற்று சிகிச்சை, தடுப்புப் பணிகளுக்காக, பொதுமக்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்க வேண்டும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.

அதனை ஏற்று, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள், திரையுலகினர் உட்பட பல்வேறு தரப்பினரும் நிதி வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில், பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.2 கோடி நன்கொடை வழங்கியுள்ளது. தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்த லைகா நிர்வாகிகள் தமிழ்குமரன், நிருதன் மற்றும் கெளரவ், இரண்டு கோடி ரூபாய்க்கான காசோலையை முதல்வரிடம் வழங்கினார்கள்.