சென்னை

கொரோனா பரவலை முன்னிட்டு தமிழகத்தில் அக்டோபர் 31 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாகத் தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.  அதனால் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது.   ஆயினும் மாநிலம் முழுவதும் கொரோனாவில் இருந்து முழுமையாக நிவாரணம் கிடைக்கவில்லை.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அக்டோபர் 31 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.  அதன்படி வரும் அக்டோபர் 31 வரை பொதுமக்கள் அதிகமாகக் கூடும் திருவிழாக்கள், மதம் மற்றும் அறசியல் கூட்டங்களுக்கு தடை நீடிக்கிறது.

இது குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், ”தளர்வுகள் இருந்தாலும் பொதுப் போக்குவரத்தை அவசியத் தேவைக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும்.  மாநிலம் முழுவதும் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.