ரோடு

ரோடு மாவட்டத்தில் நடைபெறும் பண்ணாரி மாரியம்மன் திருவிழாவையொட்டி வரு, 26ஆம்  தேதி  அன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

புகழ்பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது.  ஆண்டு தோறும் இந்த கோவிலில் குண்டம் திருவிழா சிறப்பாக நடைபெறும். தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளாவைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் குண்டத்தில் இறங்கி தீ மிதிப்பார்கள்.

நடப்பு  ஆண்டுக்கான திருவிழா கடந்த 11 ஆம்தேதி பூச்சாற்றுடன் தொடங்கியது. கடந்த 19 ஆம் தேதி கம்பம் சாட்டுதல் விழா நடைபெற்றது. இதைத் தொடர்ந்து வருகிற 26 ஆம் தேதி  அதிகாலை 4 மணிக்குக் குண்டத்தில் பக்தர்கள் இறங்கி தீ மிதிக்கும் விழா நடைபெற உள்ளது.

எனவே ஈரோடு மாவட்டத்திற்கு வருகிற 26 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார்.