திருச்சி

மிழக முதல்வரின் வருகையையொட்டி திருச்சியில் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது பதிவான வாக்குகளின் எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியுள்ளது.அனைத்துக் கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ளர்க் தயாராகி வருகின்றன.

திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் நாளை மாலை திருச்சி வருகிறார். திருச்சி சிறுகனூரில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். பிறகு அவர் காரில் தஞ்சை வழியாகத் திருவாரூர் செல்கிறார். 23 ஆம் தேதி அவர் திருச்சி விமான நிலையத்துக்கு வந்து சென்னை செல்கிறார்.

முதல்வர் வருகையை முன்னிட்டு அவர் பயணம் செய்யும் சாலைகளில் பாதுகாப்பு கருதி டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்றுமுதல் வருகிற 23 ஆம் தேதி வரை  தடை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர்  எச்சரித்துள்ளார்.