அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவின் கண்காணிப்பில் கூவத்தூர் நட்சத்திர ஓட்டலில் கணிசமான எம்.எல்.ஏக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நேற்று மூன்றாவது முறையாக இங்கு வந்த சசிகலா, நேற்று இரவு இங்கேயே தங்கினார்.

இந்த நிலையில் இன்று காலை வெளியான சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என  உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

நேற்று காலையில் இருந்தே இந்த பகுதியில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஐந்து மாவட்ட கண்காணிப்பாளர்கள் தலைமையில் ஐநூறு காவலர்களுக்கு மேற்பட்டவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  இந்த பகுதி முழுதுமேகாவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. செய்தியாளர்கள் மீது ஏற்கெனவே சசிகலா ஆதரவு குண்டர்கள் தாக்குதல் நடத்தியதால், செய்தியாளர்களை  பாதுகாப்பாக தனியிடத்தில்காவல்துறையினர் வைத்துள்ளனர்.

தற்போது, சசிகலா முதல்வராக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சசிகலா தரப்பி்ல் வேறு ஒருவரை முதல்வராக முன்னிறுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

உச்சநீதிமன்ற தீர்ப்பு, ஓட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.