கொடைக்கானல்

டந்த 2 தினங்களில் கொடைக்கானலில் மட்டும் முகக் கவசம் அணியாதோரிடம் இருந்து ரூ.1 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழகம் எங்கும் கொரோனா பாதிப்பு கடுமையாக உள்ளது.  நேற்று வரை தமிழகத்தில் 8,63,363 பேர் பாதிக்கப்பட்டு அதில் 12,573 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 8,44,568 பேர் குணம் அடைந்து தற்போது 6,222 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இதையொட்டி மாநில அரசு பல பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்துள்ளது.  கொரோனாவின் தாக்கத்தைக் குறைக்க முகக் கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றுவது போன்றவை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.  இந்த விதிகளை மீறுவோருக்கு கடும் அபராதம் விதிக்கப்படுகிறது.

அவ்வகையில் சுற்றுலாத்தலமான கொடைக்கானலில் கடும் சோதனை நடந்து வருகிறது.  முகக் கவசம் அணியாதோர் மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றாதோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.  அவ்வகையில் கடந்த இரு தினங்களில் சுமார் ரூ. 1 லட்சத்துக்கு மேல் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.