சென்னை: தமிழ்நாட்டில் மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் தற்போதைக்கு  திறப்பது இல்லை என தமிழக அரசு அரசாணை வெளியிடுடுள்ளது.

தமிழகத்தில்  நவம்பர் 1 ஆம் தேதி முதல் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. மேலும், நர்சரி பள்ளிகளும் திறக்கப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர், நர்சரி பள்ளிகள் திறக்கப்படாது என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மழலையர் மற்றும் நர்சரிபள்ளிகள் தற்போதைக்கு  திறக்கும் முடிவு இல்லை என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும்,பள்ளிகள் திறப்பு குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.