சென்னை: சென்னை துரைப்பாக்கம் தடுப்பூசி முகாமில் ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அந்த பகுதியில் சென்ற அரசு பேருந்தில் ஏறி பயணிகளிடம் குறை கேட்டு ஆய்வு செய்தார்.

தமிழ்நாட்டில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. சென்னையில் மட்டும் 1600 தடுப்பூசி முகாம்கள் இன்று செயல்பட்டு வருகிறது. ஏராளமான பொதுமக்கள் தடுப்பூசிகளை எடுத்து வருகின்றன்ர.

இந்த நிலையில், இன்று துரைப்பாக்கம்  எழில் நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மெகா தடுப்பூசி முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். தொடர்ந்து,  கண்ணகிநகரில் உள்ள தடுப்பூசி முகாமிற்கு நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். பின்னர்,இ  முதல்வரை சூழ்ந்து சாலையில் நின்று கொண்டிருந்த மக்களின் குறைகளையும் முதல்வர் கேட்டறிந்தார்.

தொடர்ந்து  சென்னை, கண்ணகி நகர் பகுதியில் அரசுப் பேருந்தில் ஏறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.  பேருந்து பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முககவசம், சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு பயணிகளிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.