சென்னை: மரணத்திற்கு பிறகும் மனிதனை சாதி விடாமல் துரத்துகிறது என்று வேதனை சென்னை உயர்நீதிமன்றம் இறந்தவர்களை அடக்கம் அல்லது எரிக்கச் செய்யும் மயானத்தில் சாதி பாகுபாடு காட்டக்கூடாது என்று என்றும், அனைத்து சாதியினரின் உடல்களையும் தகனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தின் பல படுதிகளில் சாதி ரீதியான பாகுபாடு பெருமளவில் பார்க்கப்படுகிறது. குறிப்பாக சாதிக்கொரு மயானம் இருந்து வருகிறது. ஒரு சாதியினர் மயானத்தில் மற்ற சாதியினர் அடக்கம் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. அதுபோல, சில பகுதிகளில் மற்ற சாதியினர் மயானத்துக்கு செல்ல வெறு சாதியினர் அனுமதிப்பதும் இல்லை. இதனால், வெகுதூரம் சுற்றி மயானத்திற்கு செல்லும் அவல நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன.

இந்த நிலையில், கோவையை சேர்ந்த அமிர்தவல்லி என்பவர் மயான நிலத்தில், ஒரு சமூகத்தினர் உடல்களை மட்டுமே எரிப்பதாகவும், மற்ற சமூகத்தினருக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை, இதை தடுக்க வேண்டும் என  வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில்  நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒருவர்  இறந்தபோதும் சாதி அவர்களை விடுவதில்லை என்று  வேதனையோடு கருத்து தெரிவித்தவர்,. 

மயானம் என அறிவிக்கப்பட்ட பகுதியில் அனைத்து சாதியினரின் உடல்களையும் தகனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும்,  மயானத்தில் பிற சமூகத்தினர் உடல்களை தகனம் செய்வதை தடுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதுபோன்ற நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படும் என்றும் கூறி உள்ளார்.