சென்னை,

ளைஞரை கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சென்னை ரவுடிகள் 3 பேர் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது தற்போது குண்டாஸ் போடப்பட்டுள்ளது.

சென்னை ஆவடி அருகே உள்ள  திருமுல்லைவாயல் பகுதியில் ஆள் கடத்தல் மற்றும் வழிப்பறி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை போலீசார் கடந்த ஆண்டு டிசம்பர் 30ந்தேதி டிபி சத்திரம் பகுதியைச் சேர்ந்த ரவுடி தட்சிணாமூர்த்தி, அவனது கூட்டாளிகள் கோகுல்நாதன், விஜயகுமார் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

விசாரணையில், அவர்கள கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி அன்று திருமுல்லைவாயல் அருகே டிபி சத்திரத்தை சேர்ந்த ஆகாஷ் என்பவரை காரில் கடத்திச்சென்று அவரிடம் இருந்து தங்கச்செயின், பர்ஸ் போன்றவற்றை பறித்துச் சென்றது தெரிய வந்தது.

இந்நிலையில், இந்த 3 ரவுடிகளுக்கும்,  அரும்பாக்கத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்ற ரவுடிக்கும் முன்விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் கிடைத்தால், தற்போது  சிறையில் அடைக்கப்பட்டுள்ள  தட்சிணாமூர்த்தி,  கோகுல்நாதன், விஜயகுமார் ஆகிய மூன்று ரவுடிகளும் மீண்டும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த உத்தரவை சென்னை  மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்  பிறப்பித்துள்ளார்.