சென்னை: சாகும் வரை என்னை நான் மாணவன் என்றே தான் அழைத்துக் கொள்வேன் என்று நடிகரும், மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன், போராட்டத்தில் குதித்துள்ள சென்னை பல்கலைக்கழக மாணவர்களிடம் தெரிவித்தார்.

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து சென்னை பல்கலைக்கழக மாணவர்களின் உள்ளிருப்பு போராட்டம் தொடர்ந்து நீடிக்கிறது. அவர்களை நடிகரும், மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

பின்னர் அவர் பேசியதாவது: நான் சாகும் வரை ஒரு மாணவன் தான். அப்படி தான் என்னை அழைத்துக் கொள்வேன். அதனால் தான் அவர்களுக்கு ஆதரவளிக்கவே இங்கு வந்துள்ளேன்.

நான் கட்சி தொடங்கி இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர்களுக்காக நான் குரல் கொடுப்பேன். ஆனால் இப்போது கட்சியை நடத்தி வருகிறேன். ஆகவே அவர்களை சந்தித்து ஆதரவு தெரிவிக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது என்றார்.