செங்கல்பட்டு: கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மதுராந்தகம் அருகே உள்ள அச்சிறுப்பாக்கத்தில் வரும் 18ந்தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மதுராந்தகம் பகுதியில் உள்ள அரசு பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.

18.11.2023 அன்று காலை 08.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை மதுராந்தகம் அருகே உள்ள  அச்சரப்பாக்கம், அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இந்த முகாம் நடைபெறுகிறது. வேலை தேடுவோர்  நேரில் வருகைபுரிந்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஆ.ர.ராகுல் நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இம்முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் மற்றும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கான மனிதவள தேவைக்குரிய நபர்களை நேர்முகத் தேர்வினை நடத்தி தேர்வு செய்ய உள்ளார்கள்.

இவ்வேலைவாய்ப்பு முகாமில் எட்டாம் வகுப்பு, 10ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு பி.இ, ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்த வேலை நாடுநர்கள், பார்மசி / பாரா மெடிக்கல் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். வயது வரம்பு 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் 18.11.2023 அன்று காலை 08.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை அச்சரப்பாக்கம், அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேரில் வருகைபுரிந்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், இம்முகாமில் பங்குபெற விருப்பமுள்ளவர்கள் மற்றும் வேலைதேடும் இளைஞர்கள் https://tnprivatejobs.tn.gov.in இணையதளம் மற்றும் https://forms.gle/xk5JHkaH81s2J5T6A என்ற கூகுல் லிங்கில் பதிவு செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பணிநியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது எனவும் தெரிவித்துக் கொள்ளப்படு கிறது.