சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்து வெளியான படம் ஜெயிலர்.

இந்தப் படம் சமீபத்தில் வெளியான விக்ரம், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களை விட அதிக வசூல் ஆனதாக கூறப்படுகிறது.

சுமார் ரூ. 600 கோடிக்கும் அதிகமாக வசூலானதை அடுத்து திக்குமுக்காடிப் போன கலாநிதி மாறன் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கே கார் ஒன்றை பரிசாகக் கொடுத்து வியப்பை ஏற்படுத்தினார்.

அதோடு நிற்காமல், படத்தின் இயக்குனர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு பரிசாக வழங்க வரிசையாக சொகுசு கார்களை தனது நிறுவனத்தின் முன் கொண்டுவந்து நிறுத்தினார்.

ரஜினிகாந்த்தை வைத்து ஜெயிலர் படத்தை நெல்சன் இயக்குவதாக அறிவிப்பு வெளியானதில் இருந்தே பெரிதாக பேசப்படவில்லை.

இருந்தபோதும் தமன்னா ஆடிய காவாலா பாடல் வெளியான பின்பு அதன் ப்ரோமோ வேற லெவலுக்கு சென்றதுடன் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்தது.

தமன்னா ப்ரோமோ-வை அடுத்து எதிர்பாராத வெற்றியை ஜெயிலர் படம் பெற்ற நிலையில் அவருக்கு மட்டும் பரிசாக கார் எதுவும் வழங்காததை அவரது ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஜெயிலர் படத்தில் கமிட்டான தமன்னா இதற்கு முன் நெல்சன் இயக்கத்தில் ரிலீசான படம் தோல்வி அடைந்ததை அடுத்து படத்தின் ஷூட்டிங்கிற்கு குறைந்த கால்ஷீட் மட்டுமே கொடுத்தார் என்று கூறப்படுகிறது.

மேலும், ரஜினிகாந்துடன் தமன்னா நடிக்க இருந்த காட்சிகளுக்கு சரியாக நேரம் ஒதுக்க முடியாமல் போனதாகவும் அதனாலேயே அவருக்கு குறைவான காட்சிகள் கொடுக்கப்பட்டதாகவும் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

படக்குழுவினருக்கும் தமன்னா-வுக்கும் இடையிலான இந்த உரசல் காரணமாகவே அவருக்கு கார் வழங்காமல் சுத்தலில் விடப்பட்டுள்ளார் என்று வலைதளத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

இருந்தபோதும் மாலத்தீவில் விடுமுறையை கழித்து வரும் தமன்னா இந்தியா வந்த பிறகு அவருக்கான வெகுமானம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.