சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் தொற்று பரவல் தடுப்பு காரணமாக கடந்த இரு மாதங்களாக நீடித்து வந்த பொதுமுடக்கத்தில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி 27 மாவட்டங்களில் தொழில்நிறுவனங்கள் கட்டுப்பாடுகளுடன் தொடங்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், தலைமைச்செயலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று ஆலோசனை நடத்தினார்.  இந்த ஆலோசனையின்போது,  மு.க.ஸ்டாலினுடன் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச்செயலாளர் இறையன்பு, துறை அதிகாரிகள்  கலந்துகெண்டனர்.

தொழில்துறையில் எதிர்கால திட்டம், செயல்பாடுகள் பற்றி துறை வாரியான ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.