இன்று தை அமாவாசை தினத்தன்று செய்ய வேண்டியவை குறித்த முக்கிய விவரங்கள் வருமாறு

தை அமாவாசை என்பது பித்ருலோகத்திற்கு திரும்பவும் செல்லக்கூடிய நமது முன்னோர்களுக்கு மனதைக் குளிர வைப்பதற்காகவும், அவர்களின் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காகவும் பாவங்களை நீக்கிக் கொள்வதற்காகவும், உரிய வழிபாடு நடத்தப்படும் சிறந்த நாளாகும்.

அமாவாசை திருநாள் முன்னோர்களுக்கு வழிபாடு செய்யும் உரிய நாளாகத் திகழ்ந்து வருகின்றது. குறிப்பாக தை மற்றும் ஆடு மாதத்தில் வரக்கூடிய அமாவாசை திருநாள் மிகவும் முக்கிய நாட்களாகப் பார்க்கப்படுகிறது. தர்ப்பணம் செய்து மற்றவர்களுக்கு தானம் கொடுத்து இந்த வழிபாடுகள் பித்ருகளுக்காக செய்யப்படுகிறது.

நமது முன்னோர்களுக்குச் செய்யக்கூடிய கடனை சரியாகச் செய்து வழிபட்டால் அவர்களின் முழு ஆசீர்வாதமும் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. பு 2024 ஆம் ஆண்டில் தை அமாவாசை திருநாளானது பிப்ரவரி ஒன்பதாம் தேதி தை வெள்ளிக்கிழமை வருகின்றது.

அமாவாசை பிப்ரவரி ஒன்பதாம் தேதி காலை 7.53 மணிக்குப் பிறகு அமாவாசை திதி தொடங்கி பிப்ரவரி 10ஆம் தேதி காலை 4.34 மணி முடிவடைகிறது.. அமாவாசை நேரத்தில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்து படையில் வைத்து வழிபட்டால் நம்முடைய அனைத்து விதமான வேண்டுதல்களையும் அவர்கள் நிறைவேற்றி வைப்பார்கள் என நம்பப்படுகிறது.

பிப்ரவரி 9 ஆம் தேதி காலை 7.53 மணிக்கு தை அமாவாசை திருநாள் தொடங்குகின்ற காரணத்தினால் காலை 8 மணி அளவில் குளம் அல்லது ஆறு மற்றும் கடற்கரை பகுதிகளுக்குச் சென்று தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்யலாம். அன்றைய தினம் மாலை நேரத்தில் சந்திரனை வழிபட்டு விளக்கேற்ற வேண்டும் என்பது ஐதீகமாக உள்ளது.

தர்ப்பணம் கொடுக்கும் நாளில் ஏழை மற்றும் வயதானவர்களுக்கு அன்னதானம் செய்து முன்னோர்களின் ஆசீர்வாதத்தை முழுமையாகப் பெறலாம் தை அமாவாசை திருநாளில் நாம் கொடுக்கும் அன்னதானமானது மிகப்பெரிய புண்ணியமாகும். அதேபோல மனிதர்கள் மட்டுமல்லாது மற்ற ஜீவராசிகளுக்கும் உணவு கொடுத்தால் அனைத்து விதமான பாவங்களும் போகும் என நம்பப்படுகிறது.