சென்னை: உருது, தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முறையில் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.   இதற்கு காரணம் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என கூறும் திமுக அரசு, இந்த பட்டியலில் இந்தி மொழியையும் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.

10-ம் வகுப்பில் விருப்பப் பாடத்திற்கு தேர்ச்சி மதிப்பெண்னை 35ஆக நிர்ணயித்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முறையில் மாற்றம் 2024-25 கல்வியாண்டுக்கான 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 5 பாடங்களைத் தாண்டி விருப்ப பாடத்தை தேர்வு செய்யும் மாணவர்கள் அதில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது .  விருப்ப பாடத்தை தேர்வு செய்துள்ள மாணவர்கள், இனி 6 பாடத் தேர்வுகளையும் எழுத வேண்டும்.

சிறுபான்மையினர் பள்ளிகளில் பயிலும் சுமார் 4 ஆயிரம் மாணவர்கள் விருப்ப பாடத்தை பயிலுகின்றனர்; வழக்கமாக தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 5 பாடங்களை எழுதும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வில் எந்த மாற்றமும் இல்லை.

உருது, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட விருப்பப்பாடங்களில் பெறும் மதிப்பெண் சான்றிதழில் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

த்தாம் வகுப்பு பொது தேர்வில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என முறையே 5 பாடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு, 500 மதிப்பெண்களுக்கு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. தலா 100 மதிப்பெண்கள் என, 500 மதிப்பெண்கள் என்ற நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த 2006 ஆம் ஆண்டு , கட்டாயம் தமிழ் படிக்கும் சட்டத்தை அப்போதைய திமுக அரசு கொண்டு வந்தது. தமிழ் அல்லாமல் பிற மொழியை தாய்மொழியாக கொண்ட மாணவர்கள், பத்தாம் வகுப்பு வரை தமிழை ஒரு பாடமாக படிக்காமலேயே உயர்கல்விக்கு சென்று விடுகிறார்கள் என்றும், எனவே பத்தாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் கட்டாயம் தமிழ் படிக்க வேண்டும்; தமிழ் தேர்வு எழுத வேண்டும் என்ற அடிப்படையில், அந்த சட்டம் கொண்டுவரப்பட்டது.

தமிழை தாய் மொழியாக இல்லாத மாணவர்கள், தங்கள் மொழி பாடத்தை படிக்க வேண்டும் என்று விரும்பியதால், பிறமொழியை தாய் மொழியாக கொண்ட மாணவர்கள், அவர்களது மொழி பாடத்தை, தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களை தொடர்ந்து நான்காவது விருப்ப படமாக படிக்கலாம் என்றும், ஆனால் அதில் பெறக்கூடிய மதிப்பெண்கள் தேர்ச்சிக்கு கணக்கில் கொள்ளப்படாது என்றும் அரசாணை வெளியிடப்பட்டது.

இதனையடுத்து தங்களது மொழிக்கான தேர்வில் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாதது, அவமதிப்பதாக இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில், சிறுபான்மை சமுதாய அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன. அந்த வழக்கில், விருப்ப பாடத்திற்கும் மதிப்பெண்கள் வழங்கி, தேர்ச்சிக்குரிய மதிப்பெண்களை நிர்ணயம் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது .

அதன் அடிப்படையில், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் தற்போது அரசாணை வெளியிட்டிருக்கிறார். அதில், நான்காவது விருப்ப படமாக இடம் பெறும் தமிழ் அல்லாத பிறமொழி பாடங்களுக்கு, 35 மதிப்பெண்கள் தேர்ச்சிக்குரிய மதிப்பெண்கள் என்றும், இந்த மதிப்பெண் இனி தேர்ச்சிக்குரிய கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்றும், இந்த புதிய நடைமுறை அடுத்த கல்வியாண்டில் (2024-2025) இருந்து அமலுக்கு வருவதாகவும் அறிவித்துள்ளார்.

இதன் மூலம் தமிழ் அல்லாத பிறமொழி பாடத்தை விருப்பப்படமாக தேர்வு செய்யக்கூடிய மாணவர்களுக்கு, அடுத்த கல்வி ஆண்டிலிருந்து ஒட்டுமொத்தமாக 6 பாடங்கள் ; 600 மதிப்பெண்கள் என்ற புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது. மற்ற மாணவர்களுக்கு வழக்கம் போல் 5 பாடங்கள் ; 500 மதிப்பெண்கள் என்ற நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

திராவிட மாடல் திமுக அரசு, தமிழனுக்கும், தமிழ்மொழிக்கும் துரோகம் செய்யும் வகையில்,  மற்ற மாநில மொழிகளுடன்  அந்நிய நாட்டு மொழியான உருதுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அரசாணை வெளியிட்டுள்ளது. அப்படி இருக்கும்போது, பெரும்பாலான மாநிலங்களில் பேசப்படும் இந்தி மொழியையும் சேர்க்கலாமே என கல்வியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இன்றைய காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில், இந்திமொழி பேசும் வட மாநிலத்தவர்கள், கட்டுமானப்பணி உள்பட அரசு பணி என அனைத்து பணிகளில் உள்ளதுடன் விவசாய பணிகளிலும் களமிறங்கி உள்ளனர்.  அவர்கள் இல்லையென்றால் தமிழ்நாட்டின் சாலைப்பணிகள், கட்டுமானப் பணிகள் உள்பட கடுமையான பணிகள் நடைபெறாது என்ற சூழல் உள்ளது.  அப்படி இருக்கும்போது,  இந்திய மொழியான  இந்தி மொழி மீது மட்டும் ஏன் வன்மம், அதையுமை சேர்த்துவிடலாமே என சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்படுகிறது.

வாங்கு வங்கி அரசியலுக்காக தமிழனின் உரிமைகள் கொஞ்சம் கொஞ்சமாக தமிழக அரசியல்வாதிகளால் பிடுங்கப்பட்டு வருவது வேதனையான விஷயம். இதை எதிர்க்க வேண்டிய தமிழனும் டாஸ்மாக்குக்கு அடிமையாகி, தன்னிலை மறந்து கிடப்பது, தமிழினத்தின் சாபக்கேடு போலும்…

கேள்விக்குறியான தமிழ் கட்டாயம் உத்தரவு: ஆசிரியர் பணி தேர்வுக்கு உருது, தெலுங்கு, கன்னட மொழிகள் சேர்த்து அரசாணை வெளியீடு…