சென்னை: தமிழகத்தில் 27 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தலில் வென்று  அ.தி.மு.க. மீண்டும் ஆட்சியை தக்கவைத்து கொண்டுள்ளது. இதையடுத்து  ஆறாவது முறையாக தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்றார்.  இந்த நிலையில், 27 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடம் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத் தலைவராக சம்பு கலோலிகர் நிமியக்கப்பட்டுள்ளார்.
பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளராக எஸ்.கே.பிரபாகரன் நிமியக்கப்பட்டுள்ளார்.
தமிழக மருத்துவ பணிகள் கழகத் தலைவராக ஆபூர்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் எரிசக்தி முகமை மேலாண் இயக்குநராக ஜக்மோகன் சிங் ராஜூ நியமிக்கப்பட்டுள்ளார்.
download
எரிசக்தி துறை கூடுதல் தலைமைச் செயலாளராக என்.எஸ்.பழனியப்பன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை செயலாளராக அமுதா நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு உப்பு கழக மேலாண் இயக்குநராக உதயசந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
நிதித்துறை செலவின செயலாளராக உமாநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் வளர்ச்சி கழக செயலாளராக வெங்கடேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிற்பட்டோர் நலத்துறை செயலாளராக ஏ.கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.
றுகுறு நடுத்தர தொழில்கள் துறைச் செயலாளர் மங்கத்ராம் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் தகவல்துறை செயலாளராக வெங்கடேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
நிதித்துறை செலவினப்பிரிவு செயலாளராக உமாநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
இண்டிகோ சர்வ தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராக அம்புஜ் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
வணிகவரித் துறை கூடுதல் ஆணையராக சந்திரமவுலி நியமிக்கப்பட்டுள்ளார்.
மாற்றுதிறனாளிகள் நலத்துறை ஆணையராக நஜிமுதீன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் இணைய அகடாமியின் செயலாளராக ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
வீட்டுவசதித்துறை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவுக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.  சென்னைப் பெருநகர வளர்ச்சி ஆணைய உறுப்பினர் செயலாளராகவும் இவர் செயல்படுவார்.
தமிழகத்தின் சிமெண்ட் நிறுவன, மேலாண் இயக்குநர் பதவியிலேயே சி.காம்ராஜ் தொடருவார்”

  • இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.