சென்னை: பொதுமக்கள் தங்களின் குறைகளை முதல்வரிடம் தெரிவிக்க தனி இணையதளம் தொடங்கப்பட்டு உள்ளது. http://cmcell.tn.gov.in: என்ற இணையதளத்தில் பொதுமக்கள் தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.

ஸ்டாலின் தலைமையிலான தமிழகஅரசு பதவி ஏற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். தேர்தல் பிரசாரத்தின்போது மக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் மீது தீர்வு காண தனி பிரிவை உருவாக்கி, அதற்கான  தீர்வுகளை எடுத்து வருகிறார்.மேலும் மக்கள் வாழ்வாதாரம் காக்கும் வகையில் கொரோனா நிவாரண நிதி உள்பட பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறார்.  கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் இந்த காலகட்டத்தில், தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், பொதுமக்கள் தங்களிடம் உள்ள குறைகளை தெரிவிக்கும் வகையில் தனி இணையதளத்தை தொடங்கி உள்ளார். அதற்காக http://cmcell.tn.gov.in  என்ற தனிப்பிரிவு இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வழங்கிய புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் இணையத்தில் உடனடியாக தெரிந்து கொள்ளலாம்.