சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஆளுநரைச் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அமைச்சரவை கடந்த மே மாதம் 7ந்தேதி பதவி ஏற்றது. இதையடுத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்திய முதல்வர் ஸ்டாலின், பொதுமுடக்கம் அறிவித்து தொற்றுபரவலை கட்டுப்படுத்தி உள்ளார். தற்போது தளர்வுகளுடன் ஊரடங்கு தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில்,  தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜுன் 9) மாலை சந்திக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.   இந்த சந்திப்பின்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், தடுப்பூசி மற்றும் மாநிலத்தின் சூழல் குறித்து ஆளுநரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  எடுத்துரைப்பார் எனக் கூறப்படுகிறது.