மும்பை

பிரபல இந்தி திரைப்பட நடிகர் கோவிந்தா சிவசேனா கட்சியில் இணைந்துள்ளார். 

பிரபல இந்தி நடிகர் கோவிந்தா நாடாளுமன்றத் தேர்தலில் வடமேற்கு மும்பை தொகுதியில் சிவசேனா சார்பில் போட்டியிட உள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது. இதையொட்டி அவர் சமீபத்தில் மும்பையில் உள்ள வர்ஷா பங்களாவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயை சந்தித்துப் பேசியதாகக் கூறப்பட்டது.

நேற்று அவர் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே முன்னிலையில் சிவசேனாவில் இணைந்தார்.  முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, காவிக் கொடியைக் கொடுத்து 60 வயதான நடிகர் கோவிந்தாவை கட்சிக்கு வரவேற்றார்.

நடிகர் கோவிந்தா செய்தியாளர்களிடம்,

”நான் 2004 முதல் 2009 வரை அரசியலில் ஈடுபட்ட, நான் மீண்டும் அரசியலுக்கு வருவேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. நான் 14 ஆண்டுக்கால வனவாசத்துக்குப் பிறகு மீண்டும் அரசியலுக்கு வந்து இருக்கிறேன். எனக்கு வாய்ப்பு கொடுத்தால் கலாச்சாரம், கலைத் துறையில் பணியாற்றுவேன். ஏக்நாத் ஷிண்டே முதல்வர் ஆன பிறகு மும்பை அழகாக மாறி வருவதும், வளர்ச்சி அடைவதும் தெரிகிறது”

என்று கூறினார்.

கடந்த 2009-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வடக்கு மும்பை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நடிகர் கோவிந்தா போட்டியிட்டார். அப்போது அவர் வடக்கு மும்பை தொகுதியில் தொடர்ந்து 5 முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பாஜகவின் ராம் நாயக்கை தோற்கடித்து அதிர்ச்சி அளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.