ஜெய்ப்பூர்

ரும் 6 ஆம் தேதி அன்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியாகிறது

.

காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு, பிரசாரம் உள்ளிட்ட பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளது. இதற்கிடையே கட்சியின் தேர்தல் அறிக்கை அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி வெளியிடப்படும் என ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா கூறியுள்ளார்.

நேற்று ஜெய்ப்பூரில் காங்கிரசின் தேர்தல் வியூகங்கள் குறித்து நடந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய ரந்தாவா, இந்த தகவலை வெளியிட்டார்.

மேலும் அவர்,

“வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி அன்று ஜெய்ப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர்கள் சோனியா, ராகுல் ஆகியோர் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிடுவார்கள்’ 

என்று தெரிவித்தார்.