சென்னை:
வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள தலைவர்களின் படங்களை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள தலைவர்களின் படங்களை நீக்கக் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கறிஞர் ரமேஷ் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் வாகனங்களின் வெளிப்புறத்தில் தெரியும்படி தலைவர்களின் புகைப்படங்கள் அல்லது வேறு ஏதேனும் புகைப்படங்கள் ஒட்டியிருந்தால் அதை 60 நாட்களில் அகற்ற வேண்டும்.

வாகனங்களில் அரசியல் கட்சிக் கொடிகள் மற்றும் தலைவர்களின் புகைப்படங்களை அரசியல் கட்சியினர் தேர்தல் நேரத்தில் பயன்படுத்தலாமே தவிர, மற்ற நேரங்களில் பயன்படுத்துவது ஏற்புடையது அல்ல, அதேபோல் வாகனங்களில் தடை செய்யப்பட்ட ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் விதிமுறை மீறிய நம்பர் பிளேட்டுகளை நீக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.