சென்னை

அடுத்த 4 நாட்களுக்குத் தமிழகத்தில் சில மாவட்டங்களுக்குக் கன மழை பெய்யலாம் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில்

“தமிழகத்தின் சில மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காணமாக அடுத்த 4 நாட்களுக்குக் கன மழை பெய்யக்கூடும். இன்று கோவை, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மேற்குத் தொடர்ச்சி மலை ஒட் டிய (திருப்பூர், தென் காசி) மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங் க ளில் ஒரு சில இடங் ளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை (9ம் தேதி) கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன ம ழை யும், திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங் க ளில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும். வருகிற 10ம் தேதி (செவ்வாய் கிழமை) நீலகிரி, கோவை  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், தவிர திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

வருகிற 11ம் தேதி (புதன்கிழமை) மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிகக் கன மழையும், தென் தமிழகம், டெல்டா மாவட்டங் க ளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிகக் கன மழையும் பெய்யக்கூடும்.

அடுத்த நான்கு நாட்களுக்கு  இதர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி,  மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மித மான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி பதிவாகக்கூடும். மேலும் இன்று முதல் வருகிற 11ம் தேதி (புதன் கி ழமை) வரை தென் மேற்கு, வடக்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

அதே போல் கேரளக் கடலோரப் பகுதியை ஒட்டிய தென் கிழக்கு அரபிக் கடல்பகுதிகள்,  லட் சத் தீவு பகுதிகள், கேரள, கர்நாடக கடலோரப் பகுதிகளில்  சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்”

என எச்சரிக்கப்பட்டுள்ளது