சென்னை: 
வேளாண் துறைக்குத் தனி நிதிநிலை அறிக்கை  தாக்கல் செய்ய விருக்கும் தமிழ்நாடு அரசுக்கு ஜக்கி வாசுதேவ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
திமுகவின் தேர்தல் அறிக்கை வாக்குறுதிப்படி,  சட்டப்பேரவையில் வரும் 14ஆம் தேதி வேளாண் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து சத்குரு ஜக்கி  வாசுதேவ் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், வரலாற்றுச் சிறப்புமிக்க  வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யவிருக்கும் தமிழக அரசு பாராட்டுகள் என்றும், மிகத் தொன்மையான வேளாண் பராம்பரியம் கொண்ட, இயற்கை விவசாயத்தில் முன்னோடியான தமிழகம் இதன்மூலம் மகத்தான பொருளாதார, சுற்றுச்சூழல், ஆரோக்கிய பலன்களை நிச்சம் பெறும். வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.