சென்னை: 
சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக மின்சார ரயில் சேவை பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்றிரவு முதல் இடி, மின்னலுடன் கனமழை நீடித்து வருகிறது.
இந்த மழை காரணமாக, எழும்பூர் ரயில் நிலையம் முதல் சென்னை கடற்கரை வரை தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால்  சென்னை கடற்கரை – எழும்பூர் ரயில் நிலையங்கள் இடையே தண்டவாளத்தில் மழை நீர் தேங்கியதால், செங்கல்பட்டு, தாம்பரத்திலிருந்து வரும் மின்சார ரயில்கள் எழும்பூர் வரை மட்டுமே இயக்கப்படுகின்றன