சென்னை:
மிழகத்தின் 11 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்று சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும், நாளை முதல் இரண்டு நாட்களுக்கு சில இடங்களில் கன மழை பெய்யும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.