சண்டிகர்:

ஹரியானா மாநிலம் யமுனாகர் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளியின் பெண் முதல்வரை அதே பள்ளியில் பயிலும் 12ம் -வகுப்பு மாணவன் துப்பாக்கியால் சுட்டான். சிறிது நேரத்தில் அந்த முதல்வர் அதே இடத்தில் துடிதுடித்து இறந்தார்.

இன்று காலை 11.30 மணி அளவில் நடந்தஇந்த சம்பவம் தொடர்பாக மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர். மாணவனுக்கு துப்பாக்கி எப்படி வந்தது என்று குறித்தும், முதல்வரை துப்பாக்கியால் சுட்டு கொன்தற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.