சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்ட்களில் மிக்ஜாம் புயல் பாதிப்பு தொடர்ந்துவரும் நிலையில் இம்மாவட்ட +1, +2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மாநில அளவில் ஒரே மாதிரியான கேள்வித்தாளுடன் நடத்தப்பட உள்ள இந்த தேர்வில் +1 மற்றும் +2 வகுப்பிற்கான தேர்வு நாளையும் (7-12-2023) பத்தாம் வகுப்பிற்கான தேர்வு 11ம் தேதியும் துவங்குவதாக இருந்தது.

சென்னையில் மழை வெள்ள பாதிப்பு இன்னும் குறையாத நிலையில் சென்னை மாவட்ட பள்ளி கல்லூரிகளு்கு நாளையும் (7-12-2023) விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

மழை பாதித்த மற்ற மாவட்டங்களில் நிலைமைக்கு ஏற்ப அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரி அல்லது பள்ளியின் தலைமை ஆசிரியரே விடுமுறை அறிவிக்க அதிகாரம் அளித்துள்ளது.

இந்த நிலையில் 10, +1, +2ம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வுகள் இந்த நான்கு மாவட்டத்தில் மட்டும் ஒத்திவைக்கப்படுவதாகவும் தேர்வ தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.