சென்னை: தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடர்ந்து நீடிக்கும் என சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் 2021ம் ஆண்டுக்கான முதல்கூட்டம் இன்று ஆளுநர் பன்வாரிலால் உரையுடன் தொடங்கியது. காலை சரியாக 11 மணிக்கு அவை தொடங்கியதும், ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். ஆளுநருடன் வாக்குவாதம் செய்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்த ஆளுநர்,  எனது உரையில் ஏதேனும் தவறு இருந்தால் சட்டப்பேரவையில் விவாதிக்கலாம், என்னை உரையாற்ற விடாமல் தடுப்பது தவறு என்றார்.

இதையடுத்து,  ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு செய்தது. அதைத்தொடர்ந்து ஆளுநர் உரையாற்றினார்.

அப்போது,  கொரோனா சூழலில் மிகவும் இக்கட்டான காலத்தில் தமிழக சட்டப்பேரவை கூடியுள்ளது என்றவர், நாட்டிலேயே அதிகம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டது தமிழகம் தான் தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது என்று கூறினார்.

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்களுக்கு நன்றி, கொரோனா தடுப்பில், தமிழக காவல்துறையும் சிறப்பாக பணியாற்றியுள்ளது.

தமிழகத்தில் 2000 அம்மா மினி கிளினிக்குகள் தொடங்குவது தொலைநோக்கு பார்வையுடனான திட்டம் என்றும், தமிழகத்தில் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி எனும் முதலமைச்சரின் அறிவிப்பிற்கு பாராட்டு தெரிவிப்பதாகவும், கொரோனா நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளுக்கு இதுவரை ரூ.13208 கோடி செலவிடப்பட்டுள்ளது, கொரோனா காலகட்டத்திலும் ரூ.60,674 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது என்றார்.

மருத்துவ படிப்பில் உள்ஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளதால் சமூகநீதியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டால் நடப்பு ஆண்டில் அரசுப் பள்ளி மாணவர்கள் 435பேர் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர்.

தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடர்ந்து நீடிக்கும், அதை பின்பற்றுவதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது.

தமிழகம் தொடர்ந்து 3 முறை நல்லாளுமைக்கான விருதை பெற்றுள்ளது – இது  முதலமைச்சர் பழனிசாமியின் சிறப்பான நிர்வாகத்தை காட்டுகிறது

முதலமைச்சரின் உதவி மையம் எனும் ஒருங்கிணைக்கப்பட்ட குறை தீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றவர்,  மக்கள் தங்கள் வீடுகளில் இருந்தே 1100 என்ற எண்ணிற்கு அழைத்து அரசின் சேவைகளை பெறலாம்

காவிரியின் குறுக்கே கர்நாடக எவ்வித அணைகளையும் கட்டக்கூடாது என்று மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம், காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தின் முதல் கட்டமாக காவிரி – தெற்கு வெள்ளாறு இணைப்பு முதல்கட்டமாக துவங்கப்படும், காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து காவிரி காப்பாளன் எனும் பட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி பொருத்தமானவர் ஆகிறார் என்று புகழாரம் சூடடினார்.

உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி முல்லை பெரியா அணையின்  குறுக்கே கேரளா அணை கட்டுவதை அனுமதிக்க கூடாது,

அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தின் முதற்கட்ட பணிகள் மார்ச் மாதத்திற்கு முன்னர் நிறைவுபெறும் என்றும் ரூ.565 கோடி மதிப்பிலான சரபங்கா நீர்ப்பாச திட்டத்திற்கான பணிகள் மார்ச் மாத இறுதிக்குள் நிறைவடையும்

விவசாயிகளின்  பயிர் காப்பீடு திட்டத்திற்கான கூடுதல் செலவை தமிழக அரசு ஏற்றுக் கொண்டுள்ளது என்று கூறினார்.

தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன் பிடிக்கும் பகுதிகளில் அவர்களின் உரிமையை தமிழக அரசு உறுதி செய்யும்

தமிழக மக்கள் இந்தியாவன் எந்த பகுதியிலும் ரேசன் கடைகளில் பொருட்களை பெற ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டம் உதவும்