சென்னை: 
மிழ்நாட்டில், இன்று நடத்தப்பட்டு வரும் தடுப்பூசி சிறப்பு முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 20 லட்சத்தைத் தாண்டியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் இன்று மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.  இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய இந்த முகாம் இன்று இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது.  இந்நிலையில், மாலை 4.23  மணி நிலவரப்படி தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 20.11 லட்சமாக உள்ளது என்றும், இது நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 20 லட்சத்தை விட அதிகம் என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.