பிரபல நடிகை ஹன்சிக மீது  மோசடி புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபுதேவா இயக்கத்தில் ஜெயம் ரவி ஜோடியாக ‘எங்கேயும் காதல்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஹன்சிகா. இப்படத்தைத் தொடர்ந்து ‘மாப்பிள்ளை’, ‘வேலாயுதம்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘சிங்கம் 2’, ‘ஆம்பள’, ‘குலேபகாவலி’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.

புகார்

ஜெயம் ரவி, தனுஷ், விஜய், உதயநிதி ஸ்டாலின், ஆர்யா, சித்தார்த், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், விஷால், சிம்பு, பிரபுதேவா என தமிழின் முன்னணி மற்றும் இளம் நடிகர்கள் பெரும்பாலானோருடன் ஜோடியாக நடித்துள்ளார்.

தற்போது, மணிரத்னத்தின் உதவியாளர் தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துவரும் ‘துப்பாக்கி முனை’ மற்றும் சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் படம் ஆகியவற்றில் ஹன்சிகா நடித்து வருகிறார்.

இந்த நிலையில்,  முனுசாமி என்பவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தில், ஹன்சிகா மீது மோசடி புகார் அளித்துள்ளார். இதுவரை தான் பணியாற்றியதற்கான சம்பளத்தை ஹன்சிகா வழங்கவில்லை என்று புகார்  அதில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முனுசாமியிடம் பேசினோம். அவர், “கலைப்புலி தாணு தயாரிப்பில் விக்ரம் பிரபு நடிக்கும் படத்துக்கு நாயகி தேவை என்பதைக் கேள்விப்பட்டேன். தாணுவிடம், எனக்குத் தெரிந்த நடிகைகளில் ஒருவரை சொல்வதைகக் கூறினேன். அவரும் ஒப்புக்கொண்டார்.

இந்த நிலையில் ஹன்சிகாவின் தாயாரிடம் பேசினேன். அவரும்  தனது மகள் ஹன்சிகாவுக்கு மேலாளர் என்று யாரும் இல்லை.  ஆகவே நீங்களே பேசி முடித்துக்கொடுங்கள். கமிசன் தருகிறேன் என்றார்.

இதையடுத்து தாணு தயாரிக்கும் படத்தில் ஹன்சிகாவுக்கு வாய்ப்பு பெற்றுத்தந்தேன். ஆனால் ஹன்சிகாவும் அவரது தாயாரும் பேசியபடி கமிசன் தராமல் ஏமாற்றுகிறார்கள்” என்று ஆதங்கத்துடன் சொல்லி முடித்தார்.

ஹன்சிகாவின் தாயார் பேசிய போன் உரையாடல்களையும் மேலாளர் முனுசாமி அளித்துள்ளார்.