சென்னை:
மிழகத்தில் நேற்று 2ஆயிரத்து 141 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் மட்டும் ஆயிரத்து 773 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்த பாதிப்பு 52 ஆயிரத்து 334 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 37 ஆயிரத்து 70 ஆக பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதுவரை இல்லாத வகையில் நேற்று 49 பேர் உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனையில் 36 பேரும், தனியார் மருத்துவமனையில் 13 பேரும் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 625 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஆயிரத்து 17 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரை மொத்தம் 28 ஆயிரத்து 640 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

இந்த நிலையில், முதலமைச்சர் அலுவலகத்தில் பணியாற்றும் நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. துணை இயக்குனர் ஒருவருக்கும், அலுவலக உதவியாளர் இருவருக்கும், ஓட்டுனர் ஒருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.