டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியா காந்தி, அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது காங்கிரஸ் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராய்ப்பூரில்  நடைபெற்று வரும் அகில இந்திய காங்கிரஸ் 85வது தேசிய மாநாட்டின் கட்சியின் 2வது நாள் கூட்டத்தில், இன்று பங்கேற்று உரையாற்றிய சோனியா காந்தி,  அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ரேபரேலி எம்.பி.யான இவர், 2024ல் நடைபெற உள்ள  லோக்சபா தேர்தலில் போட்டியிட மாட்டார் என்பது உறுதியாகி உள்ளது.

த்தீஷ்கார் மாநிலம், நவராய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் 3 நாள் மாநாடு  நேற்று தொடங்கியது. .இந்த மாநாட்டில், 2024 நாடாளுமன்ற  தேர்தலுக்கான உத்தி வகுக்கப்படும், கூட்டணி குறித்து இறுதி செய்யப்பட இருப்பதாகவும், இந்த ஆண்டு நடைபெற உள்ள கர்நாடகா, தெலுங்கானா மாநில சட்டமன்ற தேர்தல்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த நிலையில், நவராய்ப்பூரில் உள்ள ராஜ்யோத்சவ் ஸ்தலத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநாடின் முதல்நாள் கூட்டம்  நேற்று (24ந்தேதி)  தொடங்கியது. முதல்நாளில், கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவால் அமைக்கப்பட்ட வழிகாட்டும் குழுவின் கூட்டம் நடைபெற்றது.  முதல்நாள் கூட்டத்தில்,  கட்சியின் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கலந்து கொள்ளவில்லை. இதனால் சற்று சலசலப்பு ஏற்பட்டது.

ஆனால்,  கூட்டத்தில் பேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ” காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற முறையில் நீங்கள் அனைவரும் உங்கள் கருத்துக் களை சுதந்திரமாக எடுத்துக்கூறுவதுடன், கூட்டாக முடிவு எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் என்ன முடிவு செய்தாலும், அதுதான் என் முடிவு. அதுதான் ஒவ்வொருவரின் முடிவும் ஆகும்” என்றவர், ஜனநாயகமும், அரசியல் சாசனமும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி உள்ள நிலையில், நாடாளுமன்ற அமைப்புகள் கடுமையான நெருக்கடிகளை சந்தித்து வருகிறது என்றும் கூறியிருந்தார்.

மேலும்,  காங்கிரஸ் கட்சி  1885-ம் ஆண்டில் இருந்து (காங்கிரஸ் கட்சி தோன்றியதில் இருந்து) இதுவரை கட்சியின் 84 மாநாடுகள் நடைபெற்றுள்ளன. மகாத்மா காந்தி காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதின் நூற்றாண்டில் இந்த மாநாடு நடைபெறுவது சிறப்பு ஆகும். காங்கிரஸ் கட்சியின் பல்வேறு மாநாடுகளில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள் பல எடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில முடிவுகள் மைல்கள் என்றவர், கட்சியின் சாசனத்தில் 32 விதிகளில் 16 திருத்தங்களை கொண்டு வருவது பற்றி முடிவு செய்யும். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பிரதமர்களுக்கும், கட்சியின் முன்னாள் தலைவர்களுக்கும் காங்கிரஸ் காரியக்கமிட்டியில் பிரதிநிதித்துவம் தரப்படும் என்றார்.

இதையடுத்து காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் கார்கேவுக்கு ஒருமனதாக வழங்கப்பட்டது.

இந்த நிலையில், இன்ற 2வது நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, சோனியா காந்தி, ராகுல்காந்தி உள்பட பெரும்பாலோனோர் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் உரையாற்றிய சோனியா காந்தி, அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிரடியாக அறிவித்தார்.

முன்னதாக,  காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் பிற்பகல் 2½ மணிக்கு ராய்ப்பூர் வந்தனர். சுவாமி விவேகானந்தர் விமான நிலையத்தில் சிறப்பு விமானத்தில் வந்திறங்கிய அவர்களுக்கு மேளதாளத்துடன், பாரம்பரிய நடனங்களுடன் உற்சாகமான வரவேற்பு வழங்கப்பட்டது.

இதில் சத்தீஷ்கார் மாநில முதல்-மந்திரி பூபேஷ் பாகல், ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட், காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், மாநில காங்கிரஸ் தலைவர் மோகன் மார்க்கம், கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் மாநாட்டு நிகழ்ச்சிகளில் சோனியாவும், ராகுலும் கலந்து கொண்டனர்.