சிவகாசி: சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் பலியான நிலையில், பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. புத்தாண்டு அன்று நடைபெற்றுள்ள இந்த சோகம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிவகாசி அருகே உள்ள புதுப்பட்டி என்ற பகுதியில் செயல்பட்டு வந்த தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில், இன்று காலை வெடிவிபத்து ஏற்பட்டது. திடீரென பட்டாசுகள் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. இந்த ஆலையில் சுமார் 30 பேர் பணியாற்றி வந்த நிலையில், வெடிவிபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 2 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு உள்ளதாகவும், மற்றவர்களை மீட்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிவகாசி அருகே புதுப்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. 2 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்த நிலையில் எஞ்சியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பட்டாசுகள் வெடித்து இரண்டு அறைகள் தரைமட்டமான நிலையில் தீயணைக்கும் பணி நடந்து வருகிறது.

விபத்து நடத்த பகுதிக்கு காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.