மதுரை: முதலமைச்சர் ஸ்டாலின் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார், அவரைப்போல மற்ற அமைச்சர்களும் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும்  என்று முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

புத்தாண்டையொட்டி, மதுரை மீனாட்சி அம்மனை குடும்பத்தினருடன் தரிசித்த முன்னாள் அதிமுக செல்லூர் ரஜு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  நாட்டு மக்கள் நோய்நொடியின்றி வாழவும், கொரோனா இல்லாத உலகமாக மாற வேண்டும் என்றும், ஒமிக்ரான் தொற்று நீங்க வேண்டியும், மீனாட்சியம்மனை வேண்டிக்கொண்டதாக கூறினார்.

கொரோனா காலக்கட்டத்தில், அ.தி.மு.க. அரசு சுறுசுறுப்பாக செயல்பட்டதுபோல, தற்போதைய தி.மு.க.அரசும் செயல்பட வேண்டும் என வலியுறுத்தியவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுறுசுறுப்பாக பணியாற்றுகிறார், அவரோடு சேர்ந்த அனைவரும் அவரைப்போல பணியாற்றி கொரோனா பரவலை குறைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும்  என வலியுறுத்தினார்.

திமுக எதிர்கட்சியாக இருந்தபோது தமிழக மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும்,  கடும்பஅட்டைதாரர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்கும் என கூறியதை திமுகஅரசு செயல்படுத்தும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து அவரிடம் செய்தியாளர்கள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி விவகாரத்தில் திமுகஅரசு ஏமாற்றி உள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறதே என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த செல்லூர் ராஜூ, இன்று  புத்தாண்டு நாள் என்பதால் நகைக்கடன் குறித்து இன்று எதுவும் பேசவேண்டாம் என கருத்து கூற மறுத்து விட்டார்.

அதுபோல மதுரை வருகை குறித்த கேள்விக்கு, திமுக எதிர்கட்சியாக இருந்தபோது மோடியை எதிர்த்து விட்டு தற்போது வரவேற்பது அளிப்பதில் இருந்தே மக்களுக்கே திமுகவின் நிலைப்பாடு என்னவென்று தெரியும் என்றவர், திமுக எதிர்கட்சியாக இருந்தபோது மோடியை எதிர்த்தவிட்டு தற்போது வரவேற்பதுஅளிப்பதில் இருந்தே மக்களுக்கே தெரியும் திமுகவின் நிலைப்பாடு என்னவென்று? என கூறினார்.

தமிழக வரலாற்றில் இதுவரை எந்தவொரு இந்திய பிரதமரும் பேசாத வகையில் தமிழ் கலாச்சாரத்தையும், பெருமையையும் பற்றி பேசிவருபவர் பிரதமர் மோடி,  உலகெங்கும் தமிழர்களின் கலாச்சார பெருமையை பறைசாற்றிவருகிறார். திருக்குறள், புறநானூறு, ஆகியவற்றை ஐநா வரை எடுத்துசென்று பேசிவருகிறார், தமிழையும், தமிழர்களையும் பாராட்டி வரும், பிரதமர் மோடி மதுரை வருகை என்பது தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியை தரக்கூடியது. மதுரை வரும் பிரதமரை தமிழக மக்கள் வாழ்த்தி வரவேற்க வேண்டும்  என்றார்.

தொடர்ந்து பேசியவர், மதுரை மாநகராட்சி கிராமம் போல உள்ளது வீதியெங்கும் சாக்கடை பெருக்கடுத்து ஓடும் நிலை உள்ளது.அ.தி.மு.க. சார்பில் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து வரும் 4ஆம் தேதி மதுரையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளோம். ஆளும் கட்சி, எதிர்கட்சி என எந்த நிலையில் இருந்தாலும் அதிமுக மக்களின் நலனுக்காக போராடும் எனவும், மதுரை மாநகராட்சிக்கு ஆயிரம் கோடி நிதி வழங்க வேண்டும். அந்த நிதியை முதல்வர் நிச்சயம்அளிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.