சென்னை:
சென்னையில் கஞ்சா விற்றுவந்த போலி சாமியார், கூட்டாளிகள் இருவருடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை ராயப்பேட்டை, மைலாப்பூர், ஐஸ்ஹவுஸ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் சாமியார் ஒருவர் கஞ்சா விற்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து சோதனையில் ஈடுபட்ட காவல் துறையினர்,  ஐஸ்ஹவுஸ் பகுதியில் காவி உடையில் ருத்ராட்ச மாலை அணிந்த சாமியார் ஒருவரைச் சுற்றி, இளைஞர் கூட்டம் நின்று கொண்டிருந்தது. இதைப் பார்த்த போலீஸார் அருகில் சென்று நோட்டமிட்டபோது, அந்த சாமியார் சிறிய பொட்டலங்களை விநியோகம் செய்து வந்ததைப் பார்த்தனர். இதையடுத்து போலீஸார், அவரிடம் கஞ்சா வாங்குவதுபோல் நடித்து சுற்றிவளைத்துப் பிடித்து சோதனை நடத்தினர். சோதனையில் அந்தச் சாமியாரிடம் 2 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
விசாரணையில் அவர் ராயப்பேட்டை யானைக்குளம் பகுதியைச் சேர்ந்த சேகர் என்றும், போலீஸாருக்கு சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக சாமியார் வேடத்தில் பொதுமக்களுக்கு குறி சொல்வதாகக் கூறி, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.